Wednesday, December 28, 2011

சந்த்ர சூரியர்

படம்: அம்பிகாபதி
பாடல்: பாபநாசம் சிவன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1937

சந்த்ர சூரியர் 
போங்கதி மாறினும் 
வீழினும் நமக்கென்ன?

இந்த இன்பமே 
சொந்தம தானால் 
வானுலகும் வேண்டாம்

காதல ரன்பைத் தடைசெய்ய உலகிலோர் 
கருவிக்கு வலிமை யுண்டோ?
சாதலே வரினும் அதிலும் இருவரும் 
பிரிந்திடா உண்மை கொண்டோம்

இந்த உலகிலென் 
உடல்பொருள் ஆவி 
நீயே எனதுயிரும்
என்னுடல் உமக்கே 
சொந்தமிவ் வடியாள் 
பேசவும் அறியேனே!

Tuesday, December 27, 2011

சிதம்பர நாதா திருவருள் தாதா

திரைப்படம் :  திருநீலகண்டர்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
இசை :  ஜி. ராமநாதன்
பாடியவர் :  எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு :  1939


சிதம்பர நாதா திருவருள் தாதா
சித்தமிரங் காதா 

திருவடி யலதொரு கதியிலன்                   (சிதம்பர நாதா)

பதஞ்சலியும் புலியும் பணியும்
குஞ்சித பதனே ஸஞ்சித மகலாதா        (சிதம்பர நாதா)


நன்று தீது மறியேன் நொந்தேனே
ஞானமிலேன் உன்னை நம்பி வந்தேனே
மன்றி லாடும் மணியே செந்தேனே
வாதா அறுபகைத் தீயில் வெந்தேனே  (சிதம்பர நாதா)

வள்ளலைப் பாடும் வாயால்

திரைப்படம்: சிவகவி
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்

ஆண்டு: 1943

வள்ளலைப் பாடும் வாயால் - அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ? - வெள்ளிமலை
வள்ளலைப் பாடும் வாயால் - அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ? - எந்தன்
ஸ்வாமியைப் பாடும் வாயால் - தகப்பன்
சாமியைப் பாடுவேனோ?


அப்பனைப் பாடும் வாயால் - ஆண்டி
சுப்பனைப் பாடுவேனோ? - என் அம்மை
யப்பனைப் பாடும் வாயால் - பழனி ஆண்டி
சுப்பனைப் பாடுவேனோ?
வள்ளியின் கண்வலை வீழ்சிலை வேடன்
கள்ளனைப் பாடுவேனோ?


அம்பிகை பாகன் எனும் - அகண்ட
ஸ்வயம்புவைப் பாடும் வாயால்
அம்பிகை பாகன் எனும் அகண்ட
ஸ்வயம்புவைப் பாடும் வாயால்
தும்பிக்கையான் தயவால் மணம் பெறும்
தம்பியைப் பாடுவேனோ?

--------------------------------------------------

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து - சுப்ரமண்ய
ஸ்வாமி உனைமறந்தார் - அந்தோ

அற்பப் பணப்பேய் பிடித்தே - அறிவிழந்து
அற்பர்களைப் புகழ்வார்


நாவால் பொய்மொழிவார் - பொருள்விரும்பி
நாவால் பொய்மொழிவார் - தனது வாழ்
நாளெல்லாம் பாழ்செய்வார் - அந்தோ
நாவால் பொய்மொழிவார் - தனது
நாவால் பொய்மொழிவார் - உன்றன்
பாவன நாமமதை ஒருபொழுதும்
பாவனை செய்தறியார்


அந்தோ விந்தையிதே - அறிந்தறிந்து
ஆழ்நரகில் உழல்வாரே - மாந்தர்
அந்தோ விந்தையிதே - அறிந்தறிந்து
ஆழ்நரகில் உழல்வாரே - இவர்
சிந்தை திருந்தி உய்ய - குகனே உன்றன்
திருவருள் புரியாயோ?

Monday, December 26, 2011

காந்தியைப் போலொரு சாந்த சொரூபனை

படம்: இராஜமுக்தி
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1948

காந்தியைப் போலொரு 
சாந்த சொரூபனைக்
காண்பதும் எளிதாமோ  - மஹாத்மா  (காந்தியை)

மாந்தரிலே 
ஞான யோகம் மேவும் - தவ
வேந்தரிலே சுயநலம் சிறிதும் இல்லா
மாந்தரிலே 
சுயநலம் சிறிதும் இல்லா

அஹிம்சை தனிலே புத்தரவர்
ஆத்ம சோதனையில் யேசு நாதரவர்
அறுபகையும் வென்ற கர்ம சீலரவர் - நமது
ராஜ்ஜியத்தாய் இந்திய நாட்டிலவதரித்த

குழந்தை உள்ளமும்  - அன்பு 
கனிந்த மொழியும் கொண்டு
கொடுமைகளை எதிர்த்து வெல்லும் சித்தன்
முழங்கால் துணியும் மோகனப் புன்னகையும்
தவழப் பகைவரும் கண்டஞ்சும் சுத்தன் - இனிமேல்  (காந்தியை)

Sunday, December 25, 2011

ஆதி தேவனே தில்லை நாதா

படம்: திருநீல கண்டர்
இசை: பாபநாசம் சிவன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1939

ஆதி தேவனே தில்லை நாதா ஏழை யெனக்குப்
பாதார விந்த மல்லால் ஆதாரம் வேறில்லை

சோதனை போதாதோ?  நான்படும் மன
வேதனை போதாதோ?

தாயை மறைத்து ஒரு சூளுண்டோ? அகிலாண்ட
நாயகா எனைஏவும் மாயையினால்  இளம்
பிராயம் களிந்து விட்டதே மனைவி யோடென்
காயம் தளர்ந்து விட்டதே

மதிசே கரனே கௌரி பதியே எனது முந்தை
விதியால் மெய்தனைத் தீண்டச் சதிவச மானோமே
அதுவும் உன்னருள் என்றே எண்ணியிருந்தேன்
கதியேது ஈசா என்றேன்

அற்புத லீலைகளை

படம்: சிவகாமி
பாடல்: பாபநாசம் சிவன்
இசை: KV மகாதேவன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1959

அற்புத லீலைகளை யாரறிவார்
அகிலாண்ட நாயகனே ஹரனே -  உந்தன்


சித்பரனே சிவனே உனதடியார்
செய்பிழைகள் பொறுத்தருளும் எனதையனே
திருஅபய வரக்கையனுன்


பாட்டி லாசையால் அன்று பரவைமனை
தூது நடந்தவா விறகு சுமந்தவா
மாட்டுடையாய் தில்லைக் காட்டினிலே - அரு
ளாட்டுடையாய் தலைஓட்டுடையாய் - உன்னைக்
காட்டி மறைப்பாய் என்னை ஆட்டி அலைப்பாய் - எம்பி
ராட்டியுடனே வாட்டமற இன்பம் ஊட்டுவை
துன்பம் ஓட்டுவாய் - உந்தன்

அரவா பரணன் திருவடி மறந்து

படம்: சிவகாமி
பாடல்: பாபநாசம் சிவன்
இசை: KV மகாதேவன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1959

அரவா பரணன் திருவடி மறந்து
அரிவையர் மோகம்கொண் டழிவாரே
ஆயிரம் கற்றறிந் தென்ன பயன்?
பகுத்தறிவிழந் துழல்வாரே


மங்கையர் மையல்எனும் மாயையில் ஆழ்ந்தவர்
சங்கர னைமனம் நினைவாரோ?
நங்கையர் காதல் நிறைந்திடில் பாறை
மனந்தனில் சிவயோகம் பயிராமோ?


வாதநோய்க் குலகில் மருந்துண்டு - பிடி
வாத நோயகல மருந்தேது?
சாதனை யாக சிற்றின்பம் புகழ்பவர்
காதினில் ஞானமொழி ஏறாதே

ஆரணங்கே! நெஞ்சம் நீ அறியாய்!

படம்: சியாமளா
பாடல்: CS ராய சுந்தரம்
இசை: ஜி. இராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1952

ஆரணங்கே நெஞ்சம் நீ அறியாய்
ஆருயிர் தங்களின் நேயமதே
பெரும் மாயமதே நீ அறியாய்


அதரங்கள் ரெண்டும் அணைந்திடா போது
ஆனந்த சொல்லே வருவது ஏது?
யாழின் தந்திதனை விரல்மீட் டாவிடில்
அமர நாதமே இல்லையன்றோ?


வாசிக்கா போது மூங்கில் அன்றோ?
வாசித்த போதே முரளி அன்றோ?
நேசமாக வண்டு பேசிய போதே
வாசத் தேன்மலர் வாழ்வல்லவோ?


மங்கையின் கோளெல்லாம் மணம்வேண் டாமென்றால்
மானிடர் சந்ததி மாயு மன்றோ?
இங்கிதம் தெரிந்தே அந்தப் பரம்பொருள்
இந்நிலம் யுகம்யுகம் தோன்றுவதே

Saturday, December 24, 2011

ஞானக்கண் ஒன்று

திரைப்படம் :  சிந்தாமணி
பாடல்: பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1937

ஞானக்கண் ஒன்று 
இருந்திடும் போதினிலே
ஊனக்கண் ணிழந்ததால் 
உலகிற்குறை யுண்டோ?

ஆன பிருந்தா வனமும் 
அதோ என் எதிரிலே
அனந்தக் கண்ணன் உருவம் 
அதோ தெரிவதாலே

வானவர் பணிந்திடும் 
மாதவன் பதம்தொழும்
அனந்தம் கிடைத்தபின் 
எது வந்தாலென்ன?

Friday, December 23, 2011

அம்பா! மனம்கனிந் துனதுகடைக் கண்பார்

திரைப்படம் :  சிவகவி
பாடலாசிரியர் :  பாபநாசம் சிவன்
இசை :  ஜி. ராமநாதன்
பாடியவர் :  எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1943

அம்பா! மனம்கனிந் துனதுகடைக் கண்பார்
திருவடி யிணைதுணை - என்
அம்பா! மனம்கனிந் துனதுகடைக் கண்பார்
திருவடி யிணைதுணை

வெம்பவ நோயற அன்பர் தமக்கருளும்
கதம்ப வனக்குயிலே! கதம்ப வனக்குயிலே!
சங்கரி ஜகதம்பா! மனம் கனிந்துனது கடைக் கண் பார்
திருவடியிணை துணை என் அம்பா

பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடிஉன்
   பாதமலர் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என்நாவும் எந்நேரமும் நின்
   திருப்பெயர் புகழ்மற வாமையும் வேண்டும்
பந்தஉலகில் மதிமயங்கி அறுபகைவர்
   வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்
இந்தவரம் தருவாய் ஜெகதீஸ்வரி
   என்றன் அன்னையே அகிலாண்ட நாயகியே

ஆனந்த நடன வினோதா

திரைப்படம் : சிவகாமி
பாடல்: பாபநாசம் சிவன்
இசை: KV மகாதேவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1959

ஆனந்த நடன வினோதா - தேவா
ஆனந்த நடன வினோதா

ஜகன்நாதா ஜகன்நாதா
ஜகன்நாதா ஜகன்நாதா

கண்மூன் றுடையாய்! கதிநீ அரனே!
கருணை யோடெனைக் கடைக்கண்பார் தயாளா!

நஞ்சா ரதமும் பணியாய்க் கொண்டாய்!
அஞ்ச வரும் நஞ்சையும் உண்டாய்!
தஞ்சமுன் குஞ்சித பாதம் தில்லை வாழ்
ஆனந்த நடன வினோதா

Thursday, December 22, 2011

மனமே! நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய்!

திரைப்படம் : அசோக்குமார்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1941

மனமே! நீ ஈசன் நாமத்தை
வாழ்த்துவாய்! தினம் வாழ்த்துவாய்!

கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே!
காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே!

காம மோகமத வைரிகள் வசமாய்
கர்மவினை சூழுலக வாதனையில்
தடுமாறும் மனமோடு துயருறாமல்
நிரந்தரமும் மகிழ்ந்துபர சுகம்பெறவும்

விளங்கும் தூய சர்ஜன சங்கம்
விடுத்த கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விளக்கில் வீழும் பழமென்று மயங்கும்
விட்டிலா காதே சஞ்சல மெங்கும்

Tuesday, December 20, 2011

மன்மத லீலையை வென்றார் உண்டோ?

திரைப்படம் : ஹரிதாஸ்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1944

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என்மதி மயங்கினேன் நான்
என்மதி மயங்கினேன் மூன்று உலகிலும்

என்னுடனே நீ பேசினால் வாய்முத்துதிர்ந்து விடுமோ? - உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ? - உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ?

உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ?
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ?
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ? -  மனம் கவர்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

கிருஷ்ணா முகுந்தா முராரே

திரைப்படம் : ஹரிதாஸ்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
இசை: ஜி. இராம நாதன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1944

கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே

கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரி கோபாலா

காளிய மர்த்தன கம்சனி தூஷன
கமலாயத நயனா கோபாலா

குடில குண்டலம் குவலய தளநீலம்
மதுர முரளீ ரவலோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாகோபாலம்

கோபி ஜன மன மோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா

தியானமே எனது மனது நிறைந்தது

திரைப்படம் :  அசோக்குமார்
பாடலாசிரியர் :  பாபநாசம் சிவன்
பாடியவர் :  எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1941

தியானமே எனது மனது நிறைந்தது
சந்த்ர பிம்ப வதனம் தனில்தினம்

காந்த சக்தியை இந்நாள் அறியேன் - நான்
காந்த சக்தியை இந்நாள் அறியேன் - இரு
கண்மயங்கி ஸ்வாதீனம் இன்றி

லோகமு மதிலே தோன்று மிந்திரிய
போகமும் யாவும் துறந்தேன் - விஷய
போகமும் யாவும் துறந்தேன் - கமல
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
மோஹன உருவும் பெயரு மாகவும்

அன்னையும் தந்தையும் தானே

திரைப்படம் : ஹரிதாஸ்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
இசை: ஜி. இராம நாதன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1944

அன்னையும் தந்தையும் தானே - பாரில்
   அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்

தாயினும் கோவிலிங் கேது - ஈன்ற
   தந்தைசொல் மிக்கதோர் மந்திர மேது
சேயின்கடன் அன்னை தொண்டு - புண்ய
   தீர்த்தமும் மூர்த்தித் தலம்இதில் உண்டு

தாயுடன் தந்தையின் பாதம் - என்றும்
   தலைவணங் காதவன் நாள்தவ றாமல்
கோவிலில் சென்றென்ன காண்பான்? - நந்த
   கோபாலன் வேண்டும் வரந்தரு வானோ?

பொன்னுடல் தன்பொருள் பூமி - பெண்டு
    புத்திர ரும்புகழ் இத்தரை வாழ்வும்
அன்னைபிதா இன்றி ஏது? - மரம்
    ஆயின் விதையின்றிக் காய்கனி ஏது?

தீன கருணா கரனே

திரைப்படம் : திருநீலகண்டர்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்

தீன கருணா கரனே நடராஜா நீல கண்டனே!

நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கி யருளும்
மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே!

மீன லோசனீ மணாளா தாண்டவ மாடும் சபாபதே
ஞானிகள் மனம்விரும்பும் நீல கண்டனே!

ஆதிஅந்தம் இல்லா ஹரனே அன்பருள்ளம் வாழும் பரனே
பாதி மதி வேணியனே பரமேசா நீல கண்டனே!