Sunday, December 25, 2011

ஆரணங்கே! நெஞ்சம் நீ அறியாய்!

படம்: சியாமளா
பாடல்: CS ராய சுந்தரம்
இசை: ஜி. இராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1952

ஆரணங்கே நெஞ்சம் நீ அறியாய்
ஆருயிர் தங்களின் நேயமதே
பெரும் மாயமதே நீ அறியாய்


அதரங்கள் ரெண்டும் அணைந்திடா போது
ஆனந்த சொல்லே வருவது ஏது?
யாழின் தந்திதனை விரல்மீட் டாவிடில்
அமர நாதமே இல்லையன்றோ?


வாசிக்கா போது மூங்கில் அன்றோ?
வாசித்த போதே முரளி அன்றோ?
நேசமாக வண்டு பேசிய போதே
வாசத் தேன்மலர் வாழ்வல்லவோ?


மங்கையின் கோளெல்லாம் மணம்வேண் டாமென்றால்
மானிடர் சந்ததி மாயு மன்றோ?
இங்கிதம் தெரிந்தே அந்தப் பரம்பொருள்
இந்நிலம் யுகம்யுகம் தோன்றுவதே

No comments:

Post a Comment