Sunday, December 25, 2011

அரவா பரணன் திருவடி மறந்து

படம்: சிவகாமி
பாடல்: பாபநாசம் சிவன்
இசை: KV மகாதேவன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1959

அரவா பரணன் திருவடி மறந்து
அரிவையர் மோகம்கொண் டழிவாரே
ஆயிரம் கற்றறிந் தென்ன பயன்?
பகுத்தறிவிழந் துழல்வாரே


மங்கையர் மையல்எனும் மாயையில் ஆழ்ந்தவர்
சங்கர னைமனம் நினைவாரோ?
நங்கையர் காதல் நிறைந்திடில் பாறை
மனந்தனில் சிவயோகம் பயிராமோ?


வாதநோய்க் குலகில் மருந்துண்டு - பிடி
வாத நோயகல மருந்தேது?
சாதனை யாக சிற்றின்பம் புகழ்பவர்
காதினில் ஞானமொழி ஏறாதே

No comments:

Post a Comment