திரைப்படம்: சிவகவி
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1943
வள்ளலைப் பாடும் வாயால் - அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ? - வெள்ளிமலை
வள்ளலைப் பாடும் வாயால் - அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ? - எந்தன்
ஸ்வாமியைப் பாடும் வாயால் - தகப்பன்
சாமியைப் பாடுவேனோ?
அப்பனைப் பாடும் வாயால் - ஆண்டி
சுப்பனைப் பாடுவேனோ? - என் அம்மை
யப்பனைப் பாடும் வாயால் - பழனி ஆண்டி
சுப்பனைப் பாடுவேனோ?
வள்ளியின் கண்வலை வீழ்சிலை வேடன்
கள்ளனைப் பாடுவேனோ?
அம்பிகை பாகன் எனும் - அகண்ட
ஸ்வயம்புவைப் பாடும் வாயால்
அம்பிகை பாகன் எனும் அகண்ட
ஸ்வயம்புவைப் பாடும் வாயால்
தும்பிக்கையான் தயவால் மணம் பெறும்
தம்பியைப் பாடுவேனோ?
--------------------------------------------------
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து - சுப்ரமண்ய
ஸ்வாமி உனைமறந்தார் - அந்தோ
அற்பப் பணப்பேய் பிடித்தே - அறிவிழந்து
அற்பர்களைப் புகழ்வார்
நாவால் பொய்மொழிவார் - பொருள்விரும்பி
நாவால் பொய்மொழிவார் - தனது வாழ்
நாளெல்லாம் பாழ்செய்வார் - அந்தோ
நாவால் பொய்மொழிவார் - தனது
நாவால் பொய்மொழிவார் - உன்றன்
பாவன நாமமதை ஒருபொழுதும்
பாவனை செய்தறியார்
அந்தோ விந்தையிதே - அறிந்தறிந்து
ஆழ்நரகில் உழல்வாரே - மாந்தர்
அந்தோ விந்தையிதே - அறிந்தறிந்து
ஆழ்நரகில் உழல்வாரே - இவர்
சிந்தை திருந்தி உய்ய - குகனே உன்றன்
திருவருள் புரியாயோ?
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1943
வள்ளலைப் பாடும் வாயால் - அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ? - வெள்ளிமலை
வள்ளலைப் பாடும் வாயால் - அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ? - எந்தன்
ஸ்வாமியைப் பாடும் வாயால் - தகப்பன்
சாமியைப் பாடுவேனோ?
அப்பனைப் பாடும் வாயால் - ஆண்டி
சுப்பனைப் பாடுவேனோ? - என் அம்மை
யப்பனைப் பாடும் வாயால் - பழனி ஆண்டி
சுப்பனைப் பாடுவேனோ?
வள்ளியின் கண்வலை வீழ்சிலை வேடன்
கள்ளனைப் பாடுவேனோ?
அம்பிகை பாகன் எனும் - அகண்ட
ஸ்வயம்புவைப் பாடும் வாயால்
அம்பிகை பாகன் எனும் அகண்ட
ஸ்வயம்புவைப் பாடும் வாயால்
தும்பிக்கையான் தயவால் மணம் பெறும்
தம்பியைப் பாடுவேனோ?
--------------------------------------------------
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து - சுப்ரமண்ய
ஸ்வாமி உனைமறந்தார் - அந்தோ
அற்பப் பணப்பேய் பிடித்தே - அறிவிழந்து
அற்பர்களைப் புகழ்வார்
நாவால் பொய்மொழிவார் - பொருள்விரும்பி
நாவால் பொய்மொழிவார் - தனது வாழ்
நாளெல்லாம் பாழ்செய்வார் - அந்தோ
நாவால் பொய்மொழிவார் - தனது
நாவால் பொய்மொழிவார் - உன்றன்
பாவன நாமமதை ஒருபொழுதும்
பாவனை செய்தறியார்
அந்தோ விந்தையிதே - அறிந்தறிந்து
ஆழ்நரகில் உழல்வாரே - மாந்தர்
அந்தோ விந்தையிதே - அறிந்தறிந்து
ஆழ்நரகில் உழல்வாரே - இவர்
சிந்தை திருந்தி உய்ய - குகனே உன்றன்
திருவருள் புரியாயோ?
No comments:
Post a Comment