Sunday, December 25, 2011

ஆதி தேவனே தில்லை நாதா

படம்: திருநீல கண்டர்
இசை: பாபநாசம் சிவன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1939

ஆதி தேவனே தில்லை நாதா ஏழை யெனக்குப்
பாதார விந்த மல்லால் ஆதாரம் வேறில்லை

சோதனை போதாதோ?  நான்படும் மன
வேதனை போதாதோ?

தாயை மறைத்து ஒரு சூளுண்டோ? அகிலாண்ட
நாயகா எனைஏவும் மாயையினால்  இளம்
பிராயம் களிந்து விட்டதே மனைவி யோடென்
காயம் தளர்ந்து விட்டதே

மதிசே கரனே கௌரி பதியே எனது முந்தை
விதியால் மெய்தனைத் தீண்டச் சதிவச மானோமே
அதுவும் உன்னருள் என்றே எண்ணியிருந்தேன்
கதியேது ஈசா என்றேன்

No comments:

Post a Comment