Friday, December 23, 2011

அம்பா! மனம்கனிந் துனதுகடைக் கண்பார்

திரைப்படம் :  சிவகவி
பாடலாசிரியர் :  பாபநாசம் சிவன்
இசை :  ஜி. ராமநாதன்
பாடியவர் :  எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1943

அம்பா! மனம்கனிந் துனதுகடைக் கண்பார்
திருவடி யிணைதுணை - என்
அம்பா! மனம்கனிந் துனதுகடைக் கண்பார்
திருவடி யிணைதுணை

வெம்பவ நோயற அன்பர் தமக்கருளும்
கதம்ப வனக்குயிலே! கதம்ப வனக்குயிலே!
சங்கரி ஜகதம்பா! மனம் கனிந்துனது கடைக் கண் பார்
திருவடியிணை துணை என் அம்பா

பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடிஉன்
   பாதமலர் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என்நாவும் எந்நேரமும் நின்
   திருப்பெயர் புகழ்மற வாமையும் வேண்டும்
பந்தஉலகில் மதிமயங்கி அறுபகைவர்
   வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்
இந்தவரம் தருவாய் ஜெகதீஸ்வரி
   என்றன் அன்னையே அகிலாண்ட நாயகியே

No comments:

Post a Comment