Monday, April 30, 2012

இராஜன் மகராஜன்

திரைப்படம் : சியாமளா
பாடியவர் : எம்.கே.தியாகராஜ பாகவதர் 
ஆண்டு: 1952)

இராஜன் மகராஜன்
திருவேற்றி யூர்மேவும் திருவாளர்
தியாக ராஜன் மகராஜன்

தேஜ ஸ்வரூபன் திவ்ய மங்களதரன்
சீவடி உடையாள் சேவித்து மகிழ்ந்திடும்                (ராஜன்)

மட்டிலா உயர்மிகும் பட்டினத்தார் அன்று
கட்டிக் கலந்த கருணை யரசே
தட்டிக் கழிக்காமல் தனையனை ஆட்கொண்டு
பட்டினிப் பிணிமூப்பு பற்றாதென்றே ஆளும்      (ராஜன்)

சத்வ குண போதன்

திரைப்படம்: அசோக் குமார்
பாடல்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1941

சத்வ குண போதன் 
சதவ குண போதன்
சத்வ குண போதன் 
சரணம் இங்கு இருக்க
சத்வ குண போதன்

சித்தமும் வீணே கலங்குவ தேனோ? 
சத்வ குண போதன்

கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்                 (சத்வ குண போதன்)

கண்ணிழந் தாலென்ன கடவுட்கும் என்ன?
கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன் (சத்வ குண போதன்)

ஜீவப்ரியே சியாமளா

திரைப்படம் : சியாமளா
பாடல் : கம்பதாசன்
இசை : G.ராமநாதன்
பாடியவர் : எம்.கே.தியாகராஜ பாகவதர் 
ஆண்டு: 1952

சியாமளா சியாமளா
ஜீவப்ரியே சியாமளா - என்
ஜீவப்ரியே சியாமளா - என்
சியாமளா சியாமளா தேவி

பாதைமேல் விழியாய்ப் பார்த்தே நொந்தேன்
பாங்குடன் தேன்மொழி பேசிட வாராயோ சியாமளா?      (ஜீவப்ரியே)

என்றுனைக் காண்பேன் இன்பம் பெறுவேன்
ஏக்கமே தீர இரங்கிடு வாயே! நீயே சியாமளா                         (ஜீவப்ரியே)

ஆசைமுகம் காட்டியே என் அல்லலைத் தவிராயோ?
ஆடிவந்து எந்தன் அன்பினை மேவி
ஆனந்தம் தாராயோ ஷ்யாமளா சியாமளா தேவி?             (ஜீவப்ரியே)

தொட்டதற்கெல்லாம் தப்பெடுத்தால்

பாடியவர் :  எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.சி.வசந்தகோகிலம்

தொட்டதற்கெல்லாம் தப்பெடுத்தால் 
என்ன சொல்வேன் பெண்மயிலே?
தப்பெடுக்கும் தொழில் எங்களுக்கில்லை
கோபமுமேன் கரவாவிழியே?
பேசுவதே கோபமென்றால் என்செய்வேன்?

சாந்தமே கோமள மானே! - சத்குண 
சாந்தமே கோமள மானே!
போதுமே பரிகாசம்
இனி போதுமே பிடிவாதம்
போதுமே பரிகாசம்
நிஜ அன்பே பேரின்பம்

வண்டார் குழலாள்

பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்

வண்டார் குழலாள் உமையாள் பூங்கரத்தால் வருடும் பாதம்
தொண்டர் பணிக்குப் பரவைமனை தூது நடந்த திருப்பாதம்
விண்ட அடியார்க்கு உளம்கனிந்து பரிந்து வீடுதரும் பாதம்
கொண்ட நடனத் திருப்பாதம் தொண்டருள்ளத் திருந்தேனே

Thursday, April 26, 2012

உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ?

திரைப்படம் : அசோக்குமார்
பாடல் : பாபநாசம் சிவன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1941

உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ?
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்                       (உனைக்கண்டு)

அண்டரிலே நில மண்டல மேல் - பர
எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா                 (உனைக்கண்டு)

தீரத்திலே உயர் கம்பீரத்திலே - கொடை
உதாரத்திலே நடை ஒய்யாரத்திலே                        (உனைக்கண்டு)

தானத்திலே சொல் நிதானத்திலே - கலை
ஞானத்திலே சரஸ கானத்தில் தேவா                     (உனைக்கண்டு)

Sunday, April 22, 2012

பஜனை செய்வாய் மனமே

திரைப்படம் : அம்பிகாபதி
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1937

பஜனை செய்வாய் மனமே - தினமே
நிஜ அன்புடனே நமதாண் டவனைப்
பஜனை செய்வாய் மனமே!


கானல் நீரருந்த மானலை வதுபோல்
மாநில மாயைசுகம் விரும்பாமல்
பஜனை செய்வாய் மனமே!


முடிவில் இன்பந்தரும் கடவுளை நம்பும்
அடியரை யாளுமால் விடையூ ரரனைப்
பஜனை செய்வாய் மனமே!


சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூச லாடத் துவர்கொள் செவ்வாய்
நற்றே னொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றே ரிருக்கத் தலையலங் காரம் புறப்பட்டதே!

Friday, April 20, 2012

உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே

திரைப்படம் : திருநீலகண்டர்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1939

உன்னழகைக் காணஇரு கண்கள் போதாதே
என் கண்கள் போதாதே
உனதெழிலில் ரதிமங்கையும் நிகரோ, நாணமுறாளோ?


அனங்கனே! உம்மழகிற் குவமையுமேது?
உவமையுமேது?
அமரேந்திரன் உலகமதும் நான்விரும்பேனே!
இனி நான் விரும்பேனே!


செவியில் அமுதைப் பெய்தன்ன குயில்மொழி அணங்கே!
என் குயில்மொழி அணங்கே!
சிந்தைகவர் பூங்கோதாய் தன்னை மறந்தேன்
ஜகம் தன்னை மறந்தேன்


பன்னெடுநாள் என்மனதைக் கொள்ளை கொண்டீரே!
மனதைக் கொள்ளை கொண்டீரே!
பரமானருள் நாடைந்தேன் பாவனமானேன்!
பிறவிப் பாவனமானேன்!


நம்மிருவர் உள்ளம்நிறை காதலிளங்கே
நிறை காதலிளங்கே
வளர்பிறைபோல் வளர்ந்தோங்கவும் இறைவன் தாள்பணிவோமே

கைம்மாறு செய்வதுண்டோ?

படம்: இராஜ முக்தி
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1948

கைம்மாறு செய்வதுண்டோ? - காந்திஜிக்கு
கைம்மாறு செய்வதுண்டோ?

எம்மான் எல்லோரும் இன்புற்றிருக்கத் தான்உயிர்வாழ்ந்த
பெம்மான் தனைநினைந்து புலம்புவதன்றி வேறு                        (கைம்மாறு)

ஆண்டியும் அரசனும் ஒன்றாய் மதித்தவர்க்குத்
தீண்டாமைப் பேயைக் குழிதோண்டிப் புதைத்தவர்க்கு              (கைம்மாறு)

சேய்க்குவரும் நோய்க்குத் தாய்மருந் துண்பதுபோல்
தாய்நாட்டுத் தொல்லைகட்குத் தானுண்ணா திருப்போர்க்கு (கைம்மாறு)

போர்முனை வாள்கொண்டு உயிர்இரத்தம் சிந்தாமல்
பூர்ண சுதந்திரம் கண்டநம் பாபுஜிக்கு                                                  (கைம்மாறு)

Friday, April 13, 2012

செடி மறைவிலே ஒரு பூங்கொடி

திரைப்படம் : அமரகவி
பாடல்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. இராம நாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1953


செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன்?

பிடிக்க வந்தாலே ஓடிடு வேனே!

நிஜமே இது எனையே தொட முடியாதும்மாலே!

பாடும் குயிலே பாரிப்போதே


துள்ளி ஓடும் புள்ளி மானை
வேங்கை பிடிக்க முடியுமோ?
ஆமை அல்ல நானே
முயலென்று சொல்ல மாட்டேன்
வண்ணமலர் தூண்டிலில் என்
ஜடைப்பின்னலைப் பிடித்திழுத்தால் வலிக்காதோ?
மின்னலோடு நேசமுள்ள
சின்னஇடை ஓடுவதால் ஒடியாதோ?