Friday, April 20, 2012

உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே

திரைப்படம் : திருநீலகண்டர்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1939

உன்னழகைக் காணஇரு கண்கள் போதாதே
என் கண்கள் போதாதே
உனதெழிலில் ரதிமங்கையும் நிகரோ, நாணமுறாளோ?


அனங்கனே! உம்மழகிற் குவமையுமேது?
உவமையுமேது?
அமரேந்திரன் உலகமதும் நான்விரும்பேனே!
இனி நான் விரும்பேனே!


செவியில் அமுதைப் பெய்தன்ன குயில்மொழி அணங்கே!
என் குயில்மொழி அணங்கே!
சிந்தைகவர் பூங்கோதாய் தன்னை மறந்தேன்
ஜகம் தன்னை மறந்தேன்


பன்னெடுநாள் என்மனதைக் கொள்ளை கொண்டீரே!
மனதைக் கொள்ளை கொண்டீரே!
பரமானருள் நாடைந்தேன் பாவனமானேன்!
பிறவிப் பாவனமானேன்!


நம்மிருவர் உள்ளம்நிறை காதலிளங்கே
நிறை காதலிளங்கே
வளர்பிறைபோல் வளர்ந்தோங்கவும் இறைவன் தாள்பணிவோமே

No comments:

Post a Comment