Friday, April 20, 2012

கைம்மாறு செய்வதுண்டோ?

படம்: இராஜ முக்தி
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1948

கைம்மாறு செய்வதுண்டோ? - காந்திஜிக்கு
கைம்மாறு செய்வதுண்டோ?

எம்மான் எல்லோரும் இன்புற்றிருக்கத் தான்உயிர்வாழ்ந்த
பெம்மான் தனைநினைந்து புலம்புவதன்றி வேறு                        (கைம்மாறு)

ஆண்டியும் அரசனும் ஒன்றாய் மதித்தவர்க்குத்
தீண்டாமைப் பேயைக் குழிதோண்டிப் புதைத்தவர்க்கு              (கைம்மாறு)

சேய்க்குவரும் நோய்க்குத் தாய்மருந் துண்பதுபோல்
தாய்நாட்டுத் தொல்லைகட்குத் தானுண்ணா திருப்போர்க்கு (கைம்மாறு)

போர்முனை வாள்கொண்டு உயிர்இரத்தம் சிந்தாமல்
பூர்ண சுதந்திரம் கண்டநம் பாபுஜிக்கு                                                  (கைம்மாறு)

No comments:

Post a Comment