Sunday, April 22, 2012

பஜனை செய்வாய் மனமே

திரைப்படம் : அம்பிகாபதி
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1937

பஜனை செய்வாய் மனமே - தினமே
நிஜ அன்புடனே நமதாண் டவனைப்
பஜனை செய்வாய் மனமே!


கானல் நீரருந்த மானலை வதுபோல்
மாநில மாயைசுகம் விரும்பாமல்
பஜனை செய்வாய் மனமே!


முடிவில் இன்பந்தரும் கடவுளை நம்பும்
அடியரை யாளுமால் விடையூ ரரனைப்
பஜனை செய்வாய் மனமே!


சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூச லாடத் துவர்கொள் செவ்வாய்
நற்றே னொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றே ரிருக்கத் தலையலங் காரம் புறப்பட்டதே!

No comments:

Post a Comment