Thursday, January 12, 2012

உண்மை ஒன்றே பேசும்

திரைப்படம் : புது வாழ்வு
பாடல் : பாபநாசம் சிவன்
இசை :  ஜி. ராமநாதன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1957

உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
நன்மை தீமை எது வந்தாலும் நடுநிலையில் மாறிடாது

பொன்னில் போக பாக்யம் தன்னில் புரள நேர்ந்தாலும்
மன்னன் அருகில் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும்
இன்னல் வரவும் ஜீவன் தன்னை இழக்க நேர்ந்தாலும்
அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாது

அன்னை தந்தை தனைமறவா அருங்குணம் வேண்டும்
பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும்பயன் வேண்டும்
இன்னபயம் தனைமறவா இயல்பதும் வேண்டும்
கண்ணிரண்டும் குருடராகி கடமை மறந்து உழன்றிடாமல்

சிவபெருமான் கிருபை வேண்டும்

திரைப்படம் :  நவீன சாரங்கதாரா
பாடல் :  பாபநாசம் சிவன்
இசை :  ஜி. ராமநாதன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1936

சிவபெருமான் கிருபை வேண்டும் - அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்

அவலப் பிறப்பொழிய வேண்டும் - அதற்கு வித்தாம்
அவமாயை அகல வேண்டும் வேறென்ன வேண்டும்?

தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
சுகவாழ்வு வாழ வேண்டும் வேறென்ன வேண்டும்?

Wednesday, January 11, 2012

மாநில வாழ்வு பெறும் ஆனந்தம்

திரைப்படம் : அசோக் குமார்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
இசை : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்

மாநில வாழ்வுபெறும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே

கானமுடன் எழில் மான்விழி மாதே - அபி
மானமும் அன்பும் கலந்திருந்தால் இந்த                (மாநில)

என்மன உண்மை நிலை நீஅறிய
எடுத்துரைக்கும் மௌனம் படைத்தனை அன்பே
உன்மனச் சம்மதம் உண்டோ இல்லையோ - நான்
உணர்ந்து மகிழ வெளிக்காட்ட லாகாதோ             (மாநில)

சீநக்கன்

திரைப்படம் : சிவகவி
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1943

குளிர்ந்த முகமன் இன்சொலும் கார்முகில்போல் கொடையும்
தெளிந்த அறிவும் நிறைபனியாய் அணிசீநக்கனை
விளிந்த பல்கலை வாணர் வந்தடைவதில் விந்தை என்னே!
அளிந்த பலாக்கனி ஈக்களை வாவென்று அழைப்பதுண்டோ?

ஸ்ரீ கல்யாண குண மகிபனே

திரைப்படம் : சிவகவி
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1943

ஸ்ரீ கல்யாண குண மகிபனே
மோகன வார்கடம்பார் மார்பனே

ஸ்ரீ ராஜ வந்தன் மருகனே
முருகனே நின்ன சந்நியாசியாக வந்து
ஏக சாமான்ய மொழி புகன்றோனே

தேவ ராஜ குமாரி சாரங்க மாறா
யோகனே சாவேரி தனவே
சகல பூபாலன கருணாலய குமரவேலே

பொழுது விடிந்த துறங்குவதேன்

திரைப்படம் : சிவகவி
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
இசை : ஜி. இராமனாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1943

பொழுது விடிந்த துறங்குவதேன்
எழுவீர் எழுவீர் எல்லோரும்

கோபு விறகில்லையே குருவந்தால்
கோபம் கொள்வரே கோடரி எங்கே

உதத்தைத் தேய்க்க உளி எங்கே கோமளி
கோலம் போடுவதற்குள் நூறுமுறை அழைக்கிறாய்

செந்தளி என்றிடும் சந்தனம் வந்ததோ?
பூமாலை கட்ட இந்தப் புஷ்பங்கள் போதாது
பூஜைக்கு நேரமாச்சு போதும் போவோம்
சம்போகங் காதரா கௌரிம னோகரா

Wednesday, January 4, 2012

வதனமே சந்திர பிம்பமோ?

திரைப்படம் :  சிவகவி
பாடலாசிரியர் :  பாபநாசம் சிவன்
இசை :  ஜி. ராமநாதன்
பாடியவர் :  எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு :  1943

வதனமே சந்திர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ?
மாறன் அம்போ? நீள் விழியோ? மதுர கானமோ?

மின்னும் மோகனக் கொடியிடையாள்
அன்னமோ மடப் பிடிநடையாள்
புன்னகைதவழ் பூங்கொடியாள்
புவன சுந்தரியோ?

வசந்தருது மன மோகனமே

திரைப்படம் :  சிவகவி
பாடலாசிரியர் :  பாபநாசம் சிவன்
இசை :  ஜி. ராமநாதன்
பாடியவர் :  எம்.கே. தியாகராஜ பாகவதர், ஜெயலக்ஷ்மி
ஆண்டு :  1943

வசந்தருது மன மோகனமே
மலர்ந்த மலரிதழ் மணம்கமழ் தென்றல்

மல்லிகைப் பூங்கொடி குந்தல வராளி
மொய்த்த மலர்நகை குலுங்க விளங்கும்

நகைப்பைத்தியம் யதுகுலாம் போதிலும்
நனவிலும் கனவிலும் இதே சிந்தையா?

சுருட்டிக் கொணர்ந்து கொடுத்தலுத்தாற் போலவே
சொல்லுக்குப் பஞ்சமில்லை கொஞ்சும் குயிலின் இசை

கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே

திரைப்படம்: சிவகவி
பாடலாசிரியர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1943

கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே
கணிகையர் கண்களே மதன்விடும் வலையே

நவரசங்களிலும் சிங்காரமே தலையே
நளின நடையழகுக் கீடெங்கும் இல்லையே

புஜமிரண்டும் மூங்கில் தளர்நடை அஞ்சி
புருவம் இடையுடலும் வளையுமே கெஞ்சி
ரசிகத் தன்மையில் கைதேர்ந்தவள் வஞ்சி
ராகத்தில் சிறந்தது நாட்டக் குறிஞ்சி

கூத்தாள் முகத்திரண்டு கூர்வேலாம்

திரைப்படம் : சிவகவி
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1943

கூத்தாள் முகத்திரண்டு கூர்வேலாம்; கூத்தாள்தன்
மூத்தாள் முகத்தில் முழுநீலம் - மூத்தாள்தன்
அன்னை முகத்தில் அரவிந்தம்; அன்னைதன்
அன்னை முகத்திரண்(டு) அம்பு

காளமேகப் புலவர் பாடியது

கூத்தாள் விழிகள்நெடும் கூர்வேலாம்; கூத்தாள்தன்
மூத்தாள் விழிகள் முழுநீலம்; - மூத்தாள்தன்
ஆத்தாள் விழிகள் அரவிந்தம்; ஆத்தாள்தன்
ஆத்தாள் விழிகளிரண்(டு) அம்பு.