Wednesday, January 4, 2012

கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே

திரைப்படம்: சிவகவி
பாடலாசிரியர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1943

கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே
கணிகையர் கண்களே மதன்விடும் வலையே

நவரசங்களிலும் சிங்காரமே தலையே
நளின நடையழகுக் கீடெங்கும் இல்லையே

புஜமிரண்டும் மூங்கில் தளர்நடை அஞ்சி
புருவம் இடையுடலும் வளையுமே கெஞ்சி
ரசிகத் தன்மையில் கைதேர்ந்தவள் வஞ்சி
ராகத்தில் சிறந்தது நாட்டக் குறிஞ்சி

No comments:

Post a Comment