Wednesday, January 4, 2012

கூத்தாள் முகத்திரண்டு கூர்வேலாம்

திரைப்படம் : சிவகவி
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1943

கூத்தாள் முகத்திரண்டு கூர்வேலாம்; கூத்தாள்தன்
மூத்தாள் முகத்தில் முழுநீலம் - மூத்தாள்தன்
அன்னை முகத்தில் அரவிந்தம்; அன்னைதன்
அன்னை முகத்திரண்(டு) அம்பு

காளமேகப் புலவர் பாடியது

கூத்தாள் விழிகள்நெடும் கூர்வேலாம்; கூத்தாள்தன்
மூத்தாள் விழிகள் முழுநீலம்; - மூத்தாள்தன்
ஆத்தாள் விழிகள் அரவிந்தம்; ஆத்தாள்தன்
ஆத்தாள் விழிகளிரண்(டு) அம்பு.

No comments:

Post a Comment