Thursday, January 12, 2012

உண்மை ஒன்றே பேசும்

திரைப்படம் : புது வாழ்வு
பாடல் : பாபநாசம் சிவன்
இசை :  ஜி. ராமநாதன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1957

உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
நன்மை தீமை எது வந்தாலும் நடுநிலையில் மாறிடாது

பொன்னில் போக பாக்யம் தன்னில் புரள நேர்ந்தாலும்
மன்னன் அருகில் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும்
இன்னல் வரவும் ஜீவன் தன்னை இழக்க நேர்ந்தாலும்
அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாது

அன்னை தந்தை தனைமறவா அருங்குணம் வேண்டும்
பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும்பயன் வேண்டும்
இன்னபயம் தனைமறவா இயல்பதும் வேண்டும்
கண்ணிரண்டும் குருடராகி கடமை மறந்து உழன்றிடாமல்

No comments:

Post a Comment