Tuesday, May 1, 2012

மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ?

திரைப்படம்: ராஜமுக்தி
பாடல்: பாபநாசம் சிவன்
இசை: சி.ஆர். சுபராமன், எஸ்.எம். சுப்பைய்யா நாயுடு
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1948

மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ? உலகீர் - உயர்
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ? உலகீர் - உயர்
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ?

ஞான வைராக்யம் தவம் ஜீவ காருண்யம் - உண்மை
ஞான வைராக்யம் தவம் ஜீவ காருண்யம் - உண்மை
ஞான பக்தி பகுத்தறிவுடன் இகபர சுகம்தரும் கருணையாம்   (மானிட)

கருவறையி னுள்கிடந்து வெளியில் வரும்துயர் நினைந்தாலும் - குடல்
கலங்குதே இங்கெதிரில் மரணம் எனும் வெம்புலியும் சீறுதே
இருவினை வசமாம் இவ் உடலொரு நீர்க்குமிழி
இதனிடை உயர்நெறி யடைய மெய்இறைவனருளின் வேட்கை
உடையராகி இடையறாத திருவடி நினைவுடனே
கடிமதில் பண்டரி புரமதை ஒருமுறை கண்டுபணிந்து
ப்ரபோ பாண்டுரங்க ஜெய விட்டல என்று பணிந்திட                (மானிட)

Monday, April 30, 2012

இராஜன் மகராஜன்

திரைப்படம் : சியாமளா
பாடியவர் : எம்.கே.தியாகராஜ பாகவதர் 
ஆண்டு: 1952)

இராஜன் மகராஜன்
திருவேற்றி யூர்மேவும் திருவாளர்
தியாக ராஜன் மகராஜன்

தேஜ ஸ்வரூபன் திவ்ய மங்களதரன்
சீவடி உடையாள் சேவித்து மகிழ்ந்திடும்                (ராஜன்)

மட்டிலா உயர்மிகும் பட்டினத்தார் அன்று
கட்டிக் கலந்த கருணை யரசே
தட்டிக் கழிக்காமல் தனையனை ஆட்கொண்டு
பட்டினிப் பிணிமூப்பு பற்றாதென்றே ஆளும்      (ராஜன்)

சத்வ குண போதன்

திரைப்படம்: அசோக் குமார்
பாடல்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1941

சத்வ குண போதன் 
சதவ குண போதன்
சத்வ குண போதன் 
சரணம் இங்கு இருக்க
சத்வ குண போதன்

சித்தமும் வீணே கலங்குவ தேனோ? 
சத்வ குண போதன்

கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்                 (சத்வ குண போதன்)

கண்ணிழந் தாலென்ன கடவுட்கும் என்ன?
கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன் (சத்வ குண போதன்)

ஜீவப்ரியே சியாமளா

திரைப்படம் : சியாமளா
பாடல் : கம்பதாசன்
இசை : G.ராமநாதன்
பாடியவர் : எம்.கே.தியாகராஜ பாகவதர் 
ஆண்டு: 1952

சியாமளா சியாமளா
ஜீவப்ரியே சியாமளா - என்
ஜீவப்ரியே சியாமளா - என்
சியாமளா சியாமளா தேவி

பாதைமேல் விழியாய்ப் பார்த்தே நொந்தேன்
பாங்குடன் தேன்மொழி பேசிட வாராயோ சியாமளா?      (ஜீவப்ரியே)

என்றுனைக் காண்பேன் இன்பம் பெறுவேன்
ஏக்கமே தீர இரங்கிடு வாயே! நீயே சியாமளா                         (ஜீவப்ரியே)

ஆசைமுகம் காட்டியே என் அல்லலைத் தவிராயோ?
ஆடிவந்து எந்தன் அன்பினை மேவி
ஆனந்தம் தாராயோ ஷ்யாமளா சியாமளா தேவி?             (ஜீவப்ரியே)

தொட்டதற்கெல்லாம் தப்பெடுத்தால்

பாடியவர் :  எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.சி.வசந்தகோகிலம்

தொட்டதற்கெல்லாம் தப்பெடுத்தால் 
என்ன சொல்வேன் பெண்மயிலே?
தப்பெடுக்கும் தொழில் எங்களுக்கில்லை
கோபமுமேன் கரவாவிழியே?
பேசுவதே கோபமென்றால் என்செய்வேன்?

சாந்தமே கோமள மானே! - சத்குண 
சாந்தமே கோமள மானே!
போதுமே பரிகாசம்
இனி போதுமே பிடிவாதம்
போதுமே பரிகாசம்
நிஜ அன்பே பேரின்பம்

வண்டார் குழலாள்

பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்

வண்டார் குழலாள் உமையாள் பூங்கரத்தால் வருடும் பாதம்
தொண்டர் பணிக்குப் பரவைமனை தூது நடந்த திருப்பாதம்
விண்ட அடியார்க்கு உளம்கனிந்து பரிந்து வீடுதரும் பாதம்
கொண்ட நடனத் திருப்பாதம் தொண்டருள்ளத் திருந்தேனே

Thursday, April 26, 2012

உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ?

திரைப்படம் : அசோக்குமார்
பாடல் : பாபநாசம் சிவன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1941

உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ?
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்                       (உனைக்கண்டு)

அண்டரிலே நில மண்டல மேல் - பர
எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா                 (உனைக்கண்டு)

தீரத்திலே உயர் கம்பீரத்திலே - கொடை
உதாரத்திலே நடை ஒய்யாரத்திலே                        (உனைக்கண்டு)

தானத்திலே சொல் நிதானத்திலே - கலை
ஞானத்திலே சரஸ கானத்தில் தேவா                     (உனைக்கண்டு)