Tuesday, May 1, 2012

மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ?

திரைப்படம்: ராஜமுக்தி
பாடல்: பாபநாசம் சிவன்
இசை: சி.ஆர். சுபராமன், எஸ்.எம். சுப்பைய்யா நாயுடு
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1948

மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ? உலகீர் - உயர்
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ? உலகீர் - உயர்
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ?

ஞான வைராக்யம் தவம் ஜீவ காருண்யம் - உண்மை
ஞான வைராக்யம் தவம் ஜீவ காருண்யம் - உண்மை
ஞான பக்தி பகுத்தறிவுடன் இகபர சுகம்தரும் கருணையாம்   (மானிட)

கருவறையி னுள்கிடந்து வெளியில் வரும்துயர் நினைந்தாலும் - குடல்
கலங்குதே இங்கெதிரில் மரணம் எனும் வெம்புலியும் சீறுதே
இருவினை வசமாம் இவ் உடலொரு நீர்க்குமிழி
இதனிடை உயர்நெறி யடைய மெய்இறைவனருளின் வேட்கை
உடையராகி இடையறாத திருவடி நினைவுடனே
கடிமதில் பண்டரி புரமதை ஒருமுறை கண்டுபணிந்து
ப்ரபோ பாண்டுரங்க ஜெய விட்டல என்று பணிந்திட                (மானிட)

No comments:

Post a Comment